Monday 6 June 2011

நினைவில் நின்றவள்....

நீ என்னுள்ளே விட்டுச்சென்ற
தடயங்கள் அத்தனையும் காற்றிலே
உடைந்து போய்விட்டன.. மீதம் ஏதுமில்லை
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக.. நம் காதல்.!

********

உன் கணவனுடன்
பேசிக்கொண்டிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது
நீ பதற்றமடைவாயோ
என்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்.

********

மழை
பூக்கள்
கடல்
மரங்களடர்ந்த ரயிலடி
இவற்றைப்போலவே
இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய
கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது.!

********

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.!

No comments:

Post a Comment