Wednesday 15 June 2011

எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் !


எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் ! ( பகுதி - 3 )

சந்தேகங்கள் - 3 :
ஒரேக் கல்லில் மூன்று மாங்காய்...

மாங்காய் -1 : அரபு நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு எஜமான விசுவாசம் காட்டி மக்களுக்கெதிராக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மக்கள் புரட்சி உருவாகியிருக்கிறது. எகிப்த்து நாட்டில் உருவான மக்கள் புரட்சிதான் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக முதலில் உருவானது. அங்கே அமெரிக்க விசுவாசியாக இருந்துகொண்டு மக்களுக்கெதிராக ஆட்சி செய்த முபாரக்கை எகிப்த்து மக்கள் விரட்டி அடித்தார்கள். அங்கு கொழுந்து விட்டு எரிந்த மக்களின் எழுச்சியை முறியடிக்க முயற்சி செய்த அமெரிக்கா இறுதியில் தோல்வியைத் தான் தழுவியது. அந்த சிறுத் தீ தான் இன்று மற்ற அரபு நாடுகளில் தீப் பிழம்பாக பரவி வருகிறது. இன்றைக்கு லிபியா, துனிஷியா, குவைத்து, சௌதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி அமெரிக்க அடிவருடிகளாக திகழும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் கோபம் முன்னெப்போதும் இல்லாத ஒரு எழுச்சியாக கிளம்பியிருக்கிறது என்கிற உண்மையை அமெரிக்காவால் ஜீரணிக்கமுடியவில்லை. அதை தனது ராணுவபலத்தால் ஒடுக்கச் செய்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த மக்கள் எழுச்சி என்பது மேலும் உலகம் முழுதும் பரவாமலிருக்க, உலகமக்களை திசைத்திருப்பி விடுவதற்கு இந்த கடலுக்கடி அணுகுண்டு வெடிப்பு ( Underwater Nuclear Explosion ) நடந்திருக்குமோ..
என்பது தான் எனது சந்தேகம். இந்த சந்தேகம் காரணமாகத்தான் நாம் எளிதாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் பகுதி - 1 யும் பகுதி - 2 யும் எழுதினேன். அவை இரண்டையும் படித்தால் தான் இந்த பகுதி - 3 புரியும். இப்போது புரிகிறதா தனக்கு லாபம் கிடைக்குமென்றால் எதையும் செய்யத்துணியும் ஏகாதிபத்தியம்..

மாங்காய் - 2 : ஏன் கடலுக்கடி குண்டுவெடிப்பை ஜப்பான் பகுதியில் நடத்தவேண்டும். ஹீரோஷீமா - நாகசாகி ஆகியப்பகுதிகளில் குண்டுவீசப்பட்டு அமெரிக்கவால் நாசப்படுத்திய பின் ஜப்பான் சீர்குலைந்துவிடும் என்பது தான் அன்று அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ஆனால் இன்று நிலைமை தலைகீழாய் போய்கொண்டிருக்கிறது. ஜப்பானோ அந்த நிகழ்வை அடுத்து நொடிந்து போகாமல் அதையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறது. ஹீரோஷீமா - நாகசாகியிலும் குண்டுவீசப்பட்ட அடிசுவடே தெரியாமல் தலைகீழான வளர்ச்சி கண்டிருக்கிறது. இதையும் அமெரிக்காவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஹீரோஷீமா - நாகசாகி நாசமாக்கியதற்கு பிறகும் இன்று ஜப்பான் அமெரிக்காவின் நேச நாடாகத்தான் விளங்கிவருகிறது. அதன் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் நண்பர்களாகத்தான் இருந்துவருகிறார்கள்.
இருந்தாலும் உறவாடிக்கெடுக்கும் தன் இயற்கையான குணத்தை அமெரிக்கா இங்கே காட்டி இருக்கிறது என்பது நம் சந்தேகம். இப்போது புரிகிறதா.. தனக்கு லாபம் கிடைக்குமென்றால் மனிதக் குலமே அழிந்தாலும் அது பற்றி கவலை படாது எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம்.

மாங்காய் - 3 : சீனா.... ! ஆம் சீனாவின் வளர்ச்சியை அமெரிக்கவால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அதுவும் இயற்கை வளங்கள், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், ஆயுதம், இராணுவம் போன்றவற்றில் உலகில் எந்த நாடாவது தனக்கு சமமாகவோ தன்னைவிட அதிகமாகவோ முன்னேற்றம் அடைந்தால் அமெரிக்காவிற்கு கோபம் வரும்.
அந்த வளரும் அல்லது வளர்ந்த நாடுகளை சின்னபின்னமாக்கத் துடிப்பது அமெரிக்காவின் இயற்கையான குணாம்சம். அந்த அடிப்படையில் தான் சீனாவின் மீது அவ்வளவு எரிச்சல். சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற சிறிய நாடுகளோடு வீரமாக ராணுவ தாக்குதல் செய்வதுபோல் சீனாவுடன் மோதுவதற்கு அமெரிக்காவிற்கு தைரியமில்லை. சீனாவோடு மோதுவதற்கு இந்தியாவை தூண்டுவது போன்ற சின்னத்தனமான வேலைகளையும் ஒருப்பக்கம் செய்துகொண்டிருக்கிறது.
அதே சமயம் சீன பொருளாதாரத்தை முடக்குவதற்கான வேலைகளை தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கிறது. அனால் அதில் வெற்றிகாண முடியவில்லை. சீன பொருளாதாரத்தை முடக்குவதற்கான தற்போதைய முயற்சி. அதை பல ஆண்டுகளாக செய்துவருகிறது. அது என்னவென்றால்... இந்தியாவின் வலது பக்கத்திலிருக்கும் அரபு நாடுகளிலிருந்து தினமும் எண்ணைக்கப்பல் இந்திய - இலங்கை கடற்பகுதி வழியாக சீனா செல்கிறது. பெரும்பாலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எண்ணைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதனால் அமெரிக்கா அந்த எண்ணைக்கப்பல் போக்குவரத்தை முடக்கினால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கிவிடலாம் என்று கணக்கு போடுகிறது. எனவே இலங்கையில் தனக்கு ஒரு ராணுவத்தளம் இருந்தால் இலங்கை கடற்பகுதியாக செல்லும் எண்ணைக்கப்பலை அந்த வழியாக போகவிடாமல் தடுக்கலாமென்று ஏகாதிபத்தியம் திட்டம் போட்டது. ஏற்கனவே கன்னியாகுமரியிலிருந்து 1500 கிமீ தொலைவிலுள்ள டியாகோ கார்ஷியா என்ற இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான தீவில் அமெரிக்காவின் ராணுவத்தளமும் ஆயுதகிடங்கும் ஏவுகணைதலமும் நிறுவப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் இந்தியா - சீனாவிற்கு அருகில் வரவேண்டும் என்று அமெரிக்கா துடித்தது. அதற்காக இலங்கையில் ஓரிடம் தேவைப்பட்டது. வடக்குப்பகுதியில் இருக்கும் திரிகோணமலை ஏகாதிபத்தியத்தின் கண்ணில் படுகிறது. அனால் அது எல் டி டி ஈ வசம் இருந்தது.
எனவே திரிகோணமலையை தன் வசப்படுத்த பிரபாகரனோடு நட்புகொண்டது. பிரபாகரனுக்கோ தன் "லட்சியம்" நிறைவேறுவதற்கு ஆயுதங்கள் தேவைப்பட்டது. அப்போது தான் அமெரிக்கா பண்டமாற்று முறையை பயன்படுத்தி திரிகோணமலையை தன்வசப் படுத்தி இந்தியாவையும் சீனாவையும் ராணுவரீதியாக மிரட்டலாமென்றும் சீனாவிற்கு செல்லும் எண்ணைக்கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிடலாமென்றும் ஏகாதிபத்தியம் கனவு கண்டது. அதற்காகத் தான் பிரபாகரனுக்கு ஆயுதங்களை வழங்கியது. காரணமில்லாமல் ஏகாதிபத்தியம் ஆற்றில் இறங்காது.
இந்த சூழ்நிலையில் தான் எல் டி டி ஈ - இலங்கை இராணுவம் இவைகளுக்கு இடையே நடந்த சண்டையின் போது தான் நாட்டை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் சீனா இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவி செய்தது. அந்த சண்டையில் விடுதலைப்புலியினர் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சண்டை முடிவுக்கு வந்தது.
ஏகாதிபத்தியத்தின் கனவு பலிக்காமல் போய்விட்டது.
எனவே அடுத்து எண்ணைக்கப்பல் போகும் பாதையை அடைப்பதற்கு ஏகாதிபத்தியம் ஜப்பான் கடற்கரை பகுதியில் நடத்தியிருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால்.. தனக்கு லாபம் கிடைக்கும் என்றால் மனிதகுலமே அழிந்துபோனாலும் அதைப்பற்றி கவலைபடாது எதையும் செய்யத்துணியும் ஏகாதிபத்தியம்..!

No comments:

Post a Comment