Saturday 2 March 2013

சில (முக்கிய..இணைய) முகவரிகள்..

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/

சுகபிரசவம்..ஒரு பார்வை.

சிசேரியன் பிரசவங்கள் அதிகரிச்சு இருக்குனு சொல்ற அதே நேரத்துல, பிரசவ சிக்கல்களால ஏற்படுற தாய், சேய் இறப்பு சத விகிதம் இப்போ ரொம்பவே குறைஞ்சு ருக்கு. அதேபோல, சிரமமான பிரசவ ங்களால ஃபோர்செப்ஸ் போட்டு குழந் தையை எடுக்கறது, சிலசமயம் குழந் தையோட மூளைவளர்ச்சி பாதிப்ப டைய காரணமா ஆயிடும். இப்போ, அதுமாதிரியான குழந்தைகளின் சத விகிதமும் குறைஞ்சுருக்கு. இதுக்கெ ல்லாம் சிசேரியன் மருத்துவ சிகிச்சை க்குதான் நன்றி சொல்லணும் என்கி றார் மருத்துவர் ஒருவர்.
‘பிரசவம் என்பதே, பிற உயிரினங்க ளைப் போல, இயல்பாகத்தான் நடக்க வேண்டும். அப்படியிருக்க… எதற் காக அது சிசேரியனாக மாறவேண்டும்?’ என்பதைப் பற்றி குறிப்பிட்ட அந்த மருத்துவர்
”தாய்க்கு நீர்வற்றிப் போறது, குழந்தை பெருசா இருப்பது, அம்மா வோட இடுப்பு எலும்பு விரிவடையாம இருப்பது, கர்ப்ப வாய் திற க்காமல் இருப்பது, அம்மாவின் வயது 35-க்கும் மேல் இருப்பது, டயாபடீஸ், பி.பி. இருப்பது… இது போன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றினால், சுகப்பிரசவ வாய்ப்பு ஆபத்தாகும். அப்படிப்பட்ட சமயங் கள்லதான் சிசேரியன் மூலமா குழந்தை பத்திரமா வெளியில எடுக்கப்படுது” என்று காரணங் களை விளக் கினார்.
தொடர்ந்து  குறிபிட்ட அந்த மருத்துவர்  ”மருத்துவக் காரணங்கள் தவிர, வேறு சில காரணங்களும் இப்போ சிசேரி யனைத் தீர்மா னிக்குது. சில மருத்துவர்கள், சிரத்தை எடுத்து சுகப்பிரசவம் பார் க்கறதுக்கு… சுலபமா சிசேரியன் பண்ணிடலாம்னு நினைக்கறாங்க.  கூடவே, இப் போ எல்லாம் பிரசவ நேரத்துல பெண்ணோட அம்மா, மாமியா ர், கணவர்னு யாராவது ஒருத் தரை லேபர் வார் டுக்குள்ள விடலாம் என்று ஒரு விதி உள்ளது.. அப்படி வர்றவங்க அந்தப் பொண்ணோட பிரசவ வேதனையைப் பார்க்க முடியாம, ‘ஐயோ வேண்டா ம். சிசேரியனே பண்ணிடுங்க.’னு டாக்டர்களை வற்புறுத்துறது பல இடங்கள்ல நடக்குது. இப்படி குடும் பத்தினரோட வேண்டுகோள், வற்பு றுத்தலால சுகப்பிரசவமா நிகழ வேண்டியது… சிசேரியன் ஆயி டுற ஹிஸ்டரி நிறைய” என்றார் அந்த மரு த்துவர்  கவலையுடன்.
‘பிரசவ வலி என்பதை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ள மறுக் கிறார்கள்’ என்றொரு குற்றச்சாட்டு பரவியிருப்பது பற்றி அந்த மகப்பேறு மருத்துவரிடம் கேட்டபோது  ”பிரசவ வலி என்பது உச்ச கட்ட வலி. என்றாலும், அது பொறுத்துக் கொள் ளக்கூடிய வலிதான். இல்லைனா நம்ம பாட்டிகளும், அம்மாக்களும் எப்படி இத்தனை குழந்தைகள் பெத்திருக்க முடியும் ..? கர்ப்ப காலத்துல இருந்தே பெண் களுக்கு, ‘அது பீரியட்ஸ் நேரத்தில் அனுபவிக்கிற வலி யைப் போலவே கொஞ்சம் பெரிய வலி…’னு பிரசவவலி குறித்த அச்சத்தை அகற்றி, ‘அதிகபட்சம் 12 மணி நேர வலியைப் பொறு த்துக்கிட்டா… ஒரே நாள்ல எழுந்து நடந்து டலாம், சிசேரிய ன்னா… மூணு மாசத்துக்கு ஓய்வு எடுக்கறதோட, அறுவை சிகிச்சை யோட பின் விளைவுகளையும் அனுப விக்கணும்’னு அதைப் பத்தின விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும். இப் போ பிரசவங்கள் நவீனமாயிடுச்சு. சுகப் பிரசவத்துக்கே வலியைக் குறைக்க முதுகுல ஒரு ஊசி போட ப்படுது. அதனால, சீரான உடல் நிலையோட, ‘நம்மால் முடியும்’ என்ற மனவலிமை யை வளர்த்துக்கிட்டா, சுகப்பிரசவம் சாத்திய ம்!” என்று எளிதாக புரிய வைத்தார் அந்த மருத்துவர்.
கர்ப்ப காலத்துல இருந்தே உண வுல சில வரைமுறைகளைக் கடை ப்பிடிச்சா, தாய் – சேய் நலம் சீரா இருக்கிறதோட, அது சுகப் பிரசவத்துக்கும் வழி வகுக்கும்!” என்று சொல்கிறாய் ஒரு அனுப வமான அம்மா!
”ஆரம்ப மாதங்கள்ல வாய்வு அதிகம் உள்ள பதார்த்தங்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் எல்லாம் சாப்பிடக் கூடாது. கர்ப்பமான நாள் முதல், பிரசவமாகுற வரைக்கும்… முரு ங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் எல்லாத்தையும் சேர்த் து சூப் வெச்சு சாப்பிட்டு வந்தா… சுகப்பிரசவமாகும். மூணாவது மாசம் முதல், பிரசவமாகற வரை க்கும் வெந்தயக்கஞ்சி சாப்பிட றது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி ரெண்டு ஸ்பூன் உடைச்சுப் போட்டு கஞ்சியா காய்ச்சி… பால் சேர்த்து, மூணு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடலாம்.
5-வது மாசத்துல இருந்து எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதிநீர்ல கலந்து காலை அல்லது மதிய வேளையில சாப்பிடலாம். 7-வது மாசத்துக்குப் பிறகு, வடகத்தை பொரிச்சி, அதில ஒரு டம்ளர் தண்ணிவிட்டு கொதிக்க வெச்சு அரை டம்ளரான தும் குடிக்கலாம். இதை வாரத்தில 2 நாள் செஞ்சுட்டு வந்தா சுகப் பிரசவமாகும்.
கர்ப்ப காலங்கள்ல சிலருக்கு கை – கால் வீக்கம் வரும். இதுக்கு நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள்ஸ்பூன் பெருஞ் சீரகத்தை சட்டியில போட்டு வறுத்து வெடி ச்சதும் தண்ணிவிட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். பத்து குப்பை மேனி இலையை மென்னு சாப்பிடலாம்… இதெல்லாம் வீக்கத்தை வடிச்சுடும். இந்த நேரத்துல கருஞ்சீரகம், அன்னாசிப் பழம், வெல்லம் சாப்பிடக் கூடாது. அது கருவைக் கலைக்கலாம்.
பிரசவநாள் நெருங்கினதும் சிலருக்கு அடிக்கடி வயிறுவலி வரும் . அது சாதா ரண வலியா இருக்கலாம். அஞ்சு வெத்தி லை, ஒரு ஸ்பூன் ஓமம், 3 பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து அது வெடிச்சதும் நசுக்கிய பூண்டு, பிய்த்துப்போட்ட வெத்திலை எல்லாத்தையும் போட்டு ஒண்ண ரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வெச்சி, முக்கா டம்ளரானதும் எலுமிச் சை அளவு வெண்ணெய் இல்லைனா பனை வெல்லத்தை சேர்த்துக் குடிச்சா… சாதாரண வலியா இருந்தா நின்னுடும். வலி தொடர்ந்தா, ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நேரம் வந்தாச்சு!” என்று அழகாக சொன்னார் அந்த அனுபவ அம்மா!!!

Friday 1 March 2013

நோயின் அறிகுறியும்..தீர்வும்.

கண்கள் (கண்கள் உப்பியிருந்தால்…)
என்ன வியாதி :
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்க ளை அகற்றும் வேலையைச் செய்ப வை. அவை சரிவர வேலை செய்யவி ல்லை என்றால், உடலில் சேரும் அசு த்த நீர் வெளியேற முடியாமல் போகு ம். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
தீர்வு:
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறு நீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி
என்ன வியாதி :
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமை களில் வலி உண்டாகிறது.
தீர்வு:
போதுமான அளவு ஓய்வு எடுத்துக்கொ ள்ள வேண்டும். அதோடு உணவில் முட் டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி :
அதிகமாக வேலைசெய்துகொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸி னால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவ ல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிக ப்படியான வெளிச்சங்களும், புள் ளிகளும் பார்வைக்குத் தெரிகி றது.
தீர்வு:
எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வே ண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண் டும்.
கண்கள் உலர்ந்து போவது.
என்ன வியாதி:
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச்செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
தீர்வு:
குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக் கம் மிகவும் அவசியம். தினமும் கண்க ளை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
சருமம் (தோலில் தடிப்புகள் ஏற்படுதல்)
என்ன வியாதி :
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்தி லிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ள லாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக் டர்களுக்கே இன்னும் சரிவர புரிய வில்லை என்கிறார்கள்.
தீர்வு:
அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணு குவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி:
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போது மான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரி வடை ந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
தீர்வு:
ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீ ர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண் ணீர் அருந்த வே ண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது
என்ன வியாதி:
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும் போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ் சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில் லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
தீர்வு:
அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப் படி கல்லீரல் பிரச் சினை ஏற்படுகிறது. குடிப் பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடு வதே நல்லது.
பாதம்
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடு வது போலிருத்தல்
என்ன வியாதி:
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இரு க்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமா னது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
தீர்வு:
வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண் டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி:
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைக ளையும் தடுத்து விடுகி றது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலி யையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
தீர்வு:
பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்தி லிருக்கும் குளுக் கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக்கொஞ்சம் கட்டுப் படுத்தும். உடல்பருமனும் கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி :
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோ ன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய் யாதபோது, நம் பாதங்களின் தோல் உல ர்ந்துபோகும். பாதங்களை சரிவர பாரா மரிக்கா மல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
தீர்வு:
தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிகசோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
கைகள்
சிவந்த உள்ளங்கை
என்ன வியாதி:
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீர லால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்க ளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அத னால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகி விடும். கல்லீரல் சரியாக வேலை செய்ய வில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங் கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள் ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப் பதுதான்.
தீர்வு:
கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடு வது கல்லீரலைச் சரிப் படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடு ங்கள்.
வெளுத்த நகங்கள்
என்ன வியாதி:
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அள வில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்! ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பா க நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
தீர்வு:
இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்ப ணுக்களின் எண்ணிக்கையை அதிகரி க்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவு டன் சேர்த்துக்கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனை யின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி
என்ன வியாதி:
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டி களில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிக ளில்தான் காணப்படும். அவை வடிவ த்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதா னவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலி வருவதில்லை. எந்த வயதுக்கார ர்களுக்கும் வரலாம்.
தீர்வு:
உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரி யான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறை க்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல்
என்ன வியாதி:
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென் மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்க ளில் குழிகள் வரக் கூடும்.
தீர்வு:
உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டி ரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்
ஈறுகளில் இரத்தம் வடிதல்.
என்ன வியாதி:
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுக ளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறி குறி.
தீர்வு:
தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசி யம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி:
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதா லும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற் றும், இரும்புச்சத்து அல்லது வைட்ட மின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
தீர்வு:
‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டு ம். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ் ஸைக் குறை க்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸை டு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி:
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலி ல் அதிகப்படியான நீர் வெளியே றுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப் படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும் கூட வாய் உலர்ந்து போவ தற்கு காரணமாகும்.
தீர்வு:
நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறை ந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன் கூட வே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.