Sunday 5 June 2011

நபியின் அறிவுரை..

ஆடை விஷயத்திலும் ஆண் தொப்புளுக்கும், முழங்காலுக்கும் இடையில் உள்ள பகுதியையும், பெண் முகத்தையும், இரண்டு மணிக்கட்டுகள் வரையுள்ள கைகள் பகுதியையும் தவிர்த்து மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் என்கிறது இஸ்லாம். இன்றைய உலகில் யார் அதிகம் மறைக்க வேண்டுமோ அவர்கள் தான் அதிகம் திறந்து காட்டுவதோடு நில்லாமல், அதுதான் நாகரீகம் என்றும் துணிந்து கூறுகின்றார்கள். அந்நியப் பெண்களைத் தொடுவது கை செய்யும் விபச்சாரமாகும்.'' (ஆதாரம்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்.) மனிதன் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் சுற்றுப்புற சூழ்நிலைகள் அவனை விபச்சாரத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாக அமைந்து விடும் என்பதைக் கருத்தில் கொண்டு கீழ்வரும் பல சட்டங்களையும் கூறுகின்றது. (அந்நியப் பெண்களை) கண்ணால் (தீய இச்கையுடன்) பார்ப்பதும் விபச்சாரமாகும்.'' (ஆதாரம்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி.) ''பெண்களே! நளினமாகப் பேசாதீர்கள். அது ஆண்களின் மனதில் கிறுகிறுப்பை ஏற்படுத்தக் கூடும். பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத் தில் நோய் இருக்கிறதோ அவன் மோகம் கொள்வான்.'' (அல்குர்ஆன் :33:32) ''சலங்கை ஒலி ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் செல்லக் கூடாது தாங்கள் மறைத்து வைத்துள்ள அலங்காரத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக தங்கள் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம்.'' (அல்குர்ஆன் 24:30) ''நறுமணம் பூசிக்கொண்டு ஓர் கூட்டத்தின் பக்கம் செல்பவள் அப்படி உள்ளவளே, (ஒரு வகையில்) விபச்சாரியே!'' (ஆதாரம்: அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.) ''கணவன் இல்லாத நிலையில் உள்ள பெண்களிடம் (தனிமையில்) செல்லாதீர்கள்.'' (ஆதாரம்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.) அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள். ஒரு வாலிபர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதியளியுஙகள் என்றார். அப்போது (அங்குள்ள) மக்கள் அவரை விரட்ட ஆரம்பித்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்! என்று கூறிவிட்டு, அவரை தன் பக்கத்தில் அழைத்தார்கள். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை நோக்கி, அதை உமது தாயிடம் செய்ய நீர் விரும்புகிறீரா? என்றார்கள். அப்போது அவர் அல்லாஹ் என்னை தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக (அவ்வாறு நான் பெற்ற தாயிடம் ஒருபோதும் நடக்க) விரும்பமாட்டேன் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த மனிதரும் தமது தாயிடம் இவ்வாறு நடந்து கொள்ள விரும்பவே மாட்டார்கள் என்றார்கள். அப்படி என்றால் அதை உனது மகளிடம் செய்ய நீர் விரும்புகிறீரா? அல்லது உமது சகோதரியிடம் சின்னம்மா-பெரியம்மாவிடம் செய்ய விரும்புகிறீரா என்றார்கள். அதற்கு அவர் அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்வானாக! அல்லாஹ்மீது ஆணையாக நான் அதை செய்ய விரும்ப மாட்டேன் என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இவ்வாறு எந்த மனிதனும் செய்ய விரும்பமாட்டான் என்று கூறிவிட்டு, தமது கையை அவர் மீது வைத்து யா அல்லாஹ் இவர் பாவத்தை மன்னித்தருள்! இவரது உள்ளத்தை தூய்மையாக்கு! மேலும் இவரது அபத்தை பாதுகாப்பு செய்! என்றார்கள். அதன் பின்னர் அந்த வாலிபர் ஏற்கனவே இருந்தது போன்றில்லாது, எந்த பக்கமும் தீய சிந்தனை அற்றவராகிவிட்டார். (நூல்: அஹ்மத்) எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்''. (11:1

No comments:

Post a Comment