Tuesday 19 July 2011

இணையத்தில்..தமிழ் திரைபடம்.

இணையம் என்பது அனைத்துமே கொட்டி கிடக்கும் தகவல் களஞ்சியம். இணையத்தில் இந்த விஷயம் கிடைக்கவில்லை என்று குறை கூறினால் நீங்கள் சரியாக  இணையத்தை தேடவில்லை  என்றே பொருள். இணையத்தில் இல்லை என்பதே இல்லை அனைத்துமே கிடைக்கும் அனால் கொஞ்சம் சிரமம் எடுத்து தேட வேண்டும். இந்த வகையில் நம் தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று லேட்டஸ்ட் ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும். 

இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது. 

நீங்கள் இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடி தேடி அலுத்து போய் விட்டீர்களா ஆம் என்றால் உங்களுக்கான சிறந்த தளம் இது தான். இந்த தளத்தில் பழைய திரைப்படங்கள் கொட்டி கிடக்கிறது. பழைய பட விரும்பிகள் இந்த தளத்தை பயன் படுத்தி கொள்ளுங்கள்.

4) Tamil Peek
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

5) Tamil tvs.com
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

6)Good Lanka
இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாட்டுக்களை கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உங்களுக்கு தேவையான வீடியோ பாட்டுக்களை இந்த தளத்தில் கேட்டு மகிழலாம்.

7) Tube Kolly
இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.

8)TamilVix
இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளமும் இலவசமாக திமில் திரைப்படங்களை காண சிறந்த தளமாகும். 

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD
இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

Sunday 17 July 2011

மாத்தி யோசி..

அவன் வாழ வழியற்ற குருடன் ஒருவன். தன் வயிற்றினை கழுவிக்கொள்ள தெருவில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான் அருகில் , “நான் குருடன் உதவி செய்யுங்கள்” என்று ஒரு பலகை. முன்னால் கொஞ்சம் நாணயங்கள் அவனது திருவோட்டினுள் சிதறிக்கிடந்தன. இலக்கின்றி அவன் பார்வை எங்கோ வெறிச்சிட்டு நின்றது. நிச்சயமாக அவனக்கு கிடைத்துள்ள அந்நாணயங்கள் அவனது ஒரு வேளை உணவுக்கும் போதாது என்பதை அவன் அறிவானோ என்னவோ??
 
உலகம் வெகு வேகமாக இயங்கிகொண்டிருந்தது. எந்திரம் போல மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். அவ் ஏழை குருடனை நின்று கவனிக்க யாருமில்லை. இருந்தும் ஒருசில விட்டெறிந்த சில்லறைகள்தான் அவனைச்சுற்றிக்கிடந்தன.

அப்போது அதுவழியே வந்த ஒரு பெரியவர், நின்று, சில்லறைகள் சிலவற்றினை இடும்போது அவன் அருகில் இருந்த பலகையினை நோக்கினார். அதை எடுத்து வேறு எதுவோ கிறுக்கிவிட்டு இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். யாரோ தன் அருகிலிருக்கும் பலகிஅயில் அதுவோ செய்கின்றனர் என்பதை ஒலிக்குறிப்பில் உணர்ந்தாலும் அக்கண்பார்வையற்றவன் எதுவும் கூறவில்லை.
 
என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்திற்கெல்லாம் அவனது பாத்திரம் நிரம்பிவிட்டது. முன்பு கனிக்காமல் சென்ற மனிதர்கள் இப்போது அவனை நின்று கவனித்து அவனுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு செல்வதை உணர்ந்தான் அம்மனிதன். அதுவும் இம்மாற்றம் முன்பு யாரோ பலகையில் செய்த மாற்றத்தால் என்பதையும் அவன் உணரத்தவறவில்லை.


அந்தி சாயும் வேளை , அப்பெரியவர் மீண்டும் அவ்விடம் வந்தார். அவரது காலடிச்சத்தத்தில், அவரை அடையாளம் கண்டுகொண்டான் ( ? ). அவரிடம் ஐயா, நீங்கள்தான், என் இயலாமையினை விளம்பரப்படுத்தி நான் வைத்த அறிவிப்பில் ஏதோ செய்தீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் செய்த மாற்றத்திற்கு பின்னால் எனக்கு சில்லறைகள் போதுமானதாக கிடைத்துள்ளன என்பதை நான் உணர்கின்றேன், உங்களுக்கு என் நன்றிகள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை எனக்கு சொல்வீர்களா? என வினவினான்.

சிரித்துக்கொண்டே அப்பெரியவர் சொன்னார். வேறொன்றுமில்லை, நீ
எனக்கு கண் தெரியாது”. என நீ எழுதி வைத்ததை, கொஞ்சம் மாற்றி “ இன்றைய நாள் , மிக அழகானது. ஆனால் எனக்கு பார்க்கும் பாக்கியமில்லை” என மாற்றி எழுதினேன். அவ்வளவுதான் என சொன்னார்.

அவனுக்கு எதுவோ புரிந்தது.


அவன் முன்பு எழுதி வைத்த சேதிக்கும் பின்னர் அப்பெரியவர் மாற்றி எழுதிய செய்திக்கும் இடையில் வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனாலும் அப்பெரியவர் மாற்றியதில் இன்னும் விடயம் இருந்தது.

அவன் தனக்கும் மட்டும் குருடு என்பதை உலகுக்கு அறிவித்தான். அதில் இருந்த விடயம் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. ஆனால் அப்பெரியவர் மாற்றிய செய்தியில், பிறருக்கும் செய்தி இருந்தது. அவர்கள் இக்குருடனை விட பாக்கியம் பெற்றவர்கள் என்பது உணர்த்தப்பட்டிருந்தது. இதுதான் அவனுக்கு மேலும் பணம் சேர்க்க உதவியது.

புதிது புனைதல் (innovation) புதுமை (Novel) என்பன இருந்தால் வாழ்க்கையில் இன்னும் விரைந்து முன்னேறலாம். மொத்தத்தில் மாற்றி யோசியுங்கள்.

Monday 4 July 2011

பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி!


பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி! (ஆதாரம் இணைப்பு)
[ 2011-07-04 07:45:23 | வாசித்தோர் : 2770 ]


வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார்.


 இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார்.
இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார்.
அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை.
பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக. 



காதலிக்கின்றமை போல் நடிப்பார்,  செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார். கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.
 


ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார்.
பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார்.
சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.
மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது.
யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன்.
யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார்.



தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.



இம்மோசடிகள் குறித்து இலங்கைப் பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன. இம்மோசடிகள் குறித்த பூரண தகவல்களை பொலிஸார் திரட்டி வருகின்றனர். அத்துடன் ஏமாற்றுப் பேர்வழிகளான யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரின் நடவடிக்கைகளை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றார்கள்.
இதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளில் வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள். வெளிநாட்டு நீதிமன்றங்களின் பிடியாணை உத்தரவுகள் மூலம் சர்வதேச பொலிஸாரைக் கொண்டு யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரைக் கைது செய்கின்றமை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகின்றார்கள்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களை மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் இந்த யுவதியால் ஏமாற்றப்பட்டவர்கள் வேறு யாராவது இருக்கின்ற பட்சத்தில் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கோரப்படுகின்றார்கள்.
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் :- 0094778200114, 0094772398030
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கைப் கணக்கு பெயர்கள் :- madhu, karthika

Friday 1 July 2011

தேனின் மகிமை .


தேனின் மகிமை .

                   தேன் இயற்கை தரும் இனிய சத்துணவு.நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலம் பொருந்தி நோயின்றி வாழ விரும்புபவர்கள் பயன்படுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த அற்புத மருந்தாகும்.தேனை யார் ஒருவர் தொடர்ந்து சாப்பிடுகிறாரோ அவர் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.கண்பார்வை அற்றவர்கள் தொடர்ந்து தேனை உட்கொள்வதனால்  அவர்களது பார்வைக் கோளாறுகள் நீங்குகிறது என்பதை தேனைத் தொடர்ந்து அருந்துவதால்தான் உணர முடியும்.ஆயிரம் ஆண்டுகளாகியும் தேன் கெடுவதில்லை.சில நோய்களுக்கு தேனில் மருந்தை சேர்த்து கொடுக்கப்படுகிறது.ஏனெனில் தேன் மருந்துடனே தானும் மருந்தாகி வேலை செய்யும்.தேனில் பல சத்துக்கள் நிரம்பியுள்ளன.

                         தேன்,நோயை எதிர்க்கும் சக்தியையும்,நோய் வராமல் காப்பாற்றும் சக்தியையும் தருகிறது.தேன் கால வெப்பநிலைக்கு ஏற்றவாறும் .அந்தந்த இடத்தின் சூழ்நிலைக்குத் தக்கவாறும் கிடைக்கின்றது.பலவகையான தேன் இருந்தாலும் கொம்புத்தேன் எல்லாவற்றிலும் சிறந்தது.வாத நோய்,கொழுப்புச்சத்து ,இரத்த அழுத்த நோய் போன்ற நோய்களையுடையவர்கள் தேனை உட்கொள்ளலாம்.தேனைத் தண்ணீரில் கலந்து அருந்தினால் சிறுநீர் பெருகும்.தாது பலத்தை அதிகரிக்கச்செய்யும்.விஷம் உண்டவர்களுக்கு தேனுடன் நீர் கலந்து கொடுத்தால்,விஷத்தின் கொடுமை குறைந்து அத்தீங்கிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

                   உடல் எடை குறைய வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள்,தேனுடன் எலுமிச்சம்பழம் கலந்து பல மாதங்களாக உட்கொண்டால் உடல் எடை குறையும்.

                         தேனைப் பலர் மருந்துகள்,மூலிகைச் சாற்றுடன் கலந்து உபயோகிக்கின்றார்கள்.தேன் பல நாட்கள் ஆனதும் உறைந்து கற்கண்டாக மாறிவிடும்.இந்தக் கற்கண்டு ,தேனின் கற்கண்டை உட்கொண்டால் பாடுபவர்களுடைய குரலோசை இனிமையாக அமையும்.இசைப் பாட்டுக்குரிய குரலொலியை தேன் நல்ல முறையில் அமைக்கும்.இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து உட்கொண்டால் வாயு குணமாகும்.துளசிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி,இருமல்,கிருமி போன்றவை குறையும்.தேனும் சுண்ணாம்பும் கலந்து கட்டிகளின் மேல் தடவினால் கட்டி உடையும்.தீப்பட்ட புண்களுக்கு தேனைத் தடவினால் புண் குணமாகும்.தேனின் மகிமையை அறிந்து கொள்ளுங்கள்.நோயற்ற வாழ்வைப் பெற்றிடுங்கள் .

சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் !


இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர்  சாலை விபத்துக்களில்பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில்வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு  என்ன என்பது குறித்த ஓர் அலசல்.

1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .

2 .வேகம்
பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .


3 .ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள்நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

நிவாரணம் : தகுதியில்லாதவர்களுக்கு  ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .


4 . தூக்கம்

அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை5  மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.

நிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .


5 .குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

நிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய விஷயம்  சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளை அகற்றவேண்டும் .


6 . தரமற்ற வாகனங்கள் 
 
காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .
 
நிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்துசெய்யவேண்டும் .காலாவதியான அரசுப்பெருந்துகளை இயக்குவதை தவிர்க்கவேண்டும் 

7 .பழுதடைந்த சாலைகள் 
 
குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .
 
நிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .
8 .பொதுமக்கள் அலட்சியம்   

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடப்பது வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .
 
நிவாரணம் :பொதுமக்கள் விழிப்புணர்வு 

9 .சாலைகள் வடிவமைப்பு 
 
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .
 
நிவாரணம் :தேர்ந்தவர்களை கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும் 
10 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .
 
நிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும் .

Tamil Novels Written by Writer Sujatha


சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. 
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி பலதுறைகளில் சாதனை படைத்த எழுத்தாளார் சுஜாதா உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் இன்றும் உலக தமிழர்கள் அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம்பெற்றுள்ளது.

Tamil Novels Written by Writer Sujatha 
No.Book TitleAuthor
  Download                 
1Amma mandapamSujatha
Free Tamil eBooks
2ArangetramSujatha
Free Tamil eBooks
3ArisiSujatha
Free Tamil eBooks
4CurfewSujatha
Free Tamil eBooks
5EldoradoSujatha
Free Tamil eBooks
6Eppadiyum vazhalamSujatha
Free Tamil eBooks
7Film utsavSujatha
Free Tamil eBooks
8IlaneerSujatha
Free Tamil eBooks
9JannalSujatha
Free Tamil eBooks
10KaalgalSujatha
Free Tamil eBooks
11KaaranamSujatha
Free Tamil eBooks
12NagaramSujatha
Free Tamil eBooks
13En Iniya EndhiraSujatha
Free Tamil eBooks
14MerinaSujatha
Free Tamil eBooks
15Sujatha SirukadhaigalSujatha
Free Tamil eBooks
16Katradhum Petradhum (Vikatan)Sujatha
Free Tamil eBooks
17Kadavul IrukkiraraSujatha
Free Tamil eBooks

சுஜாதா பல நூற்றுகணக்கான நாவல்களும் சிறுகதைகளும் நாடங்களும் இயற்றி இருக்கிறார். அதில் சில புத்தகங்களை மட்டுமே என்னால் இணையத்தில் தேடி எடுக்க முடிந்தது அதை தான் உங்களோடு பகிர்து கொள்கிறேன். உங்களுக்கு வேறு ஏதேனும் புத்தகங்களின் லிங்க் தெரிந்தால் கீழே கமென்ட் பகுதியில் தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.