Sunday 29 May 2011

இந்த பானத்தை குடிக்க முயற்சிக்கவும்...


உடல் வெப்பத்தை சீராக்கும் சீரகம்
அகத்தை சீராக்க வல்லது சீரகம். வெயிலினால் ஏற்படும் அயர்ச்சியைப் போக்கி உடலைக் குளிர்விக்க உதவுபவை புதினா, கொத்தமல்லித் தழை. நாவிற்கு விரும்பத்தக்க ஸ்பைசி சுவையைத் தரும் கறுப்பு உப்பு, ஆம்ச்சூர் பொடி (காய்ந்த மாங்காய்த்தூள்) வைட்டமின் `சி' சத்து நிறைந்து புத்துணர்ச்சி அளிக்கவல்ல எலுமிச்சம் பழம். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தயாரிக்கப்
படும் `ஜல் ஜீரா'வைப் பருகி கோடையை ஜில்லென்று குளிர்ச்சியாக எதிர்கொள்ள முடியும்.
ஜல்ஜீராவை மிகவும் சுலபமாக தயாரிக்க இயலும். மிகவும் குறைந்த செலவுதான் பிடிக்கும். அப்படியென்றால் உடலுடன் மனமும் குளிர்ச்சி பெறும் என்பது நிஜம்.
வாங்க, ஜில்ஜில் ஜல்ஜீரா செய்து பருகுவோம்...!
ஜல் ஜீரா
தேவையான பொருட்கள்
சீரகம் - 4 டேபிள் ஸ்பூன்
ஆய்ந்த புதினா இலைகள், கொத்தமல்லி தழை - 1 கப் (தலா)
ஆம்ச்சூர் பொடி - 1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் - 8 கப்புகள்
அலங்கரிக்க
ஐஸ் கியூபுகள் - 8
புதினா இலைகள் - சிறிதளவு
செய்முறை
* வெறும் வாணலியில் மிதமான தீயில் சீரகத்தை நன்கு வாசனை வர வறுத்து, ஆறியதும் மிக்சியில் நைசாகப் பொடிக்கவும்.
* புதினா, கொத்தமல்லி இலைகளை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் மைய அரைக்கவும். அரைத்த பின்னர் ஒரு உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.
* இதனுடன் சீரகப்பொடி, ஆம்ச்சூர் பொடி, கறுப்பு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஐஸ் தண்ணீர் ஊற்றவும்.
* இப்போது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கவும்.
* கண்ணாடித் தம்ளர்களில் ஊற்றி மேலே புதினா இலைகள், ஐஸ் கியூபுகள் போட்டு பருகக் கொடுக்கலாம்.
* வெயிலை எதிர்கொள்ள ஆரோக்கியமும், குளிர்ச்சியும் நிறைந்த ஜல்ஜீரா தயார்.

1 comment: