சிசேரியன் பிரசவங்கள் அதிகரிச்சு இருக்குனு சொல்ற அதே நேரத்துல, பிரசவ சிக்கல்களால ஏற்படுற தாய், சேய் இறப்பு சத
விகிதம்
இப்போ ரொம்பவே குறைஞ்சு ருக்கு. அதேபோல, சிரமமான பிரசவ ங்களால ஃபோர்செப்ஸ்
போட்டு குழந் தையை எடுக்கறது, சிலசமயம் குழந் தையோட மூளைவளர்ச்சி பாதிப்ப
டைய காரணமா ஆயிடும். இப்போ, அதுமாதிரியான குழந்தைகளின் சத விகிதமும்
குறைஞ்சுருக்கு. இதுக்கெ ல்லாம் சிசேரியன் மருத்துவ சிகிச்சை க்குதான்
நன்றி சொல்லணும் என்கி றார் மருத்துவர் ஒருவர்.
‘பிரசவம் என்பதே, பிற உயிரினங்க ளைப் போல, இயல்பாகத்தான் நடக்க வேண்டும். அப்படியிருக்க… எதற் காக அது சிசேரியனாக மாறவேண்டும்?’ என்பதைப் பற்றி குறிப்பிட்ட அந்த மருத்துவர்
”தாய்க்கு நீர்வற்றிப் போறது, குழந்தை பெருசா இருப்பது, அம்மா வோட இடுப்பு எலும்பு விரிவடையாம இருப்பது, கர்ப்ப வாய் திற
க்காமல்
இருப்பது, அம்மாவின் வயது 35-க்கும் மேல் இருப்பது, டயாபடீஸ், பி.பி.
இருப்பது… இது போன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றினால், சுகப்பிரசவ வாய்ப்பு
ஆபத்தாகும். அப்படிப்பட்ட சமயங் கள்லதான் சிசேரியன் மூலமா குழந்தை பத்திரமா
வெளியில எடுக்கப்படுது” என்று காரணங் களை விளக் கினார்.
தொடர்ந்து குறிபிட்ட அந்த மருத்துவர் ”மருத்துவக் காரணங்கள் தவிர, வேறு சில காரணங்களும் இப்போ சிசேரி யனைத் தீர்மா
னிக்குது.
சில மருத்துவர்கள், சிரத்தை எடுத்து சுகப்பிரசவம் பார் க்கறதுக்கு… சுலபமா
சிசேரியன் பண்ணிடலாம்னு நினைக்கறாங்க. கூடவே, இப் போ எல்லாம் பிரசவ
நேரத்துல பெண்ணோட அம்மா, மாமியா ர், கணவர்னு யாராவது ஒருத் தரை லேபர் வார்
டுக்குள்ள விடலாம் என்று ஒரு விதி உள்ளது.. அப்படி வர்றவங்க அந்தப் பொண்ணோட
பிரசவ வேதனையைப்
பார்க்க
முடியாம, ‘ஐயோ வேண்டா ம். சிசேரியனே பண்ணிடுங்க.’னு டாக்டர்களை
வற்புறுத்துறது பல இடங்கள்ல நடக்குது. இப்படி குடும் பத்தினரோட வேண்டுகோள்,
வற்பு றுத்தலால சுகப்பிரசவமா நிகழ வேண்டியது… சிசேரியன் ஆயி டுற ஹிஸ்டரி
நிறைய” என்றார் அந்த மரு த்துவர் கவலையுடன்.
‘பிரசவ வலி என்பதை, இன்றைய பெண்கள் எதிர்கொள்ள மறுக் கிறார்கள்’ என்றொரு குற்றச்சாட்டு பரவியிருப்பது பற்றி அந்த
மகப்பேறு
மருத்துவரிடம் கேட்டபோது ”பிரசவ வலி என்பது உச்ச கட்ட வலி. என்றாலும்,
அது பொறுத்துக் கொள் ளக்கூடிய வலிதான். இல்லைனா நம்ம பாட்டிகளும்,
அம்மாக்களும் எப்படி இத்தனை குழந்தைகள் பெத்திருக்க முடியும் ..? கர்ப்ப
காலத்துல இருந்தே பெண் களுக்கு, ‘அது பீரியட்ஸ் நேரத்தில் அனுபவிக்கிற வலி
யைப் போலவே கொஞ்சம் பெரிய வலி…’னு பிரசவவலி குறித்த அச்சத்தை அகற்றி,
‘அதிகபட்சம் 12 மணி நேர வலியைப் பொறு த்துக்கிட்டா… ஒரே நாள்ல எழுந்து
நடந்து டலாம், சிசேரிய ன்னா… மூணு மாசத்துக்கு ஓய்வு எடுக்கறதோட, அ
றுவை
சிகிச்சை யோட பின் விளைவுகளையும் அனுப விக்கணும்’னு அதைப் பத்தின விழிப்பு
உணர்வை ஏற்படுத்தணும். இப் போ பிரசவங்கள் நவீனமாயிடுச்சு. சுகப்
பிரசவத்துக்கே வலியைக் குறைக்க முதுகுல ஒரு ஊசி போட ப்படுது. அதனால, சீரான
உடல் நிலையோட, ‘நம்மால் முடியும்’ என்ற மனவலிமை யை வளர்த்துக்கிட்டா,
சுகப்பிரசவம் சாத்திய ம்!” என்று எளிதாக புரிய வைத்தார் அந்த மருத்துவர்.
”
கர்ப்ப
காலத்துல இருந்தே உண வுல சில வரைமுறைகளைக் கடை ப்பிடிச்சா, தாய் – சேய்
நலம் சீரா இருக்கிறதோட, அது சுகப் பிரசவத்துக்கும் வழி வகுக்கும்!” என்று
சொல்கிறாய் ஒரு அனுப வமான அம்மா!
”ஆரம்ப
மாதங்கள்ல வாய்வு அதிகம் உள்ள பதார்த்தங்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு,
இறால்மீன் எல்லாம் சாப்பிடக் கூடாது. கர்ப்பமான நாள் முதல், பிரசவமாகுற
வரைக்கும்… முரு ங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் எல்லாத்தையும் சேர்த்
து
சூப் வெச்சு சாப்பிட்டு வந்தா… சுகப்பிரசவமாகும். மூணாவது மாசம் முதல்,
பிரசவமாகற வரை க்கும் வெந்தயக்கஞ்சி சாப்பிட றது சுகப்பிரசவத்துக்கு வழி
வகுக்கும். வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி ரெண்டு ஸ்பூன் உடைச்சுப் போட்டு
கஞ்சியா காய்ச்சி… பால் சேர்த்து, மூணு நாளைக்கு ஒரு தடவை சாப்பிடலாம்.
5-வது
மாசத்துல இருந்து எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதிநீர்ல கலந்து
காலை அல்லது மதிய வேளையில சாப்பிடலாம். 7-வது மாசத்துக்குப் பிறகு, வடகத்தை
பொரிச்சி, அ
தில ஒரு டம்ளர் தண்ணிவிட்டு கொதிக்க வெச்சு அரை டம்ளரான தும் குடிக்கலாம். இதை வாரத்தில 2 நாள் செஞ்சுட்டு வந்தா சுகப் பிரசவமாகும்.
கர்ப்ப
காலங்கள்ல சிலருக்கு கை – கால் வீக்கம் வரும். இதுக்கு நெல்லிக்காய்,
முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள்ஸ்பூன் பெருஞ் சீரகத்தை
சட்டியில போட்டு வறுத்து வெடி ச்சதும் தண்ணிவிட்டு காய்ச்சி வடிகட்டி
குடிக்கலாம். பத்து குப்பை மேனி இலையை மென்னு சாப்பிடலாம்… இதெல்லாம்
வீக்கத்தை வடிச்சுடும். இந்த நேரத்துல கருஞ்சீரகம், அன்னாசிப் பழம், வெல்லம் சாப்பிடக் கூடாது. அது கருவைக் கலைக்கலாம்.
பிரசவநாள்
நெருங்கினதும் சிலருக்கு அடிக்கடி வயிறுவலி வரும் . அது சாதா ரண வலியா
இருக்கலாம். அஞ்சு வெத்தி லை, ஒரு ஸ்பூன் ஓமம், 3 பூண்டு எடுத்து, ஓமத்தை
வறுத்து அது வெடிச்சதும் நசுக்கிய பூண்டு, பிய்த்துப்போட்ட வெத்திலை
எல்லாத்தையும்
போட்டு ஒண்ண ரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வெச்சி, முக்கா டம்ளரானதும்
எலுமிச் சை அளவு வெண்ணெய் இல்லைனா பனை வெல்லத்தை சேர்த்துக் குடிச்சா…
சாதாரண வலியா இருந்தா நின்னுடும். வலி தொடர்ந்தா, ஆஸ்பத்திரிக்குப் போக
வேண்டிய நேரம் வந்தாச்சு!” என்று அழகாக சொன்னார் அந்த அனுபவ அம்மா!!!
No comments:
Post a Comment